சிந்தித்துப் பார்க்கையில்
தித்தித்திடும் சில நினைவுகள்
துளித் துளியாய் - உணர்வுத் துளிகளாய்.....
கனவுகளின் நிலையில்லா
வண்ணங்களின் வளைவுகளில்
மணித்துளிகள் மறைந்திட்ட மாயம்
விடியல்களிலின் வெளிச்சத்தில்.....
பனித் துளிகளின் தேகத்தை
பரிதியொளி தளுவிய மோகத்தில்
கிளர்ந்தெழும் புகைத் துகள்கள்
தேகத்தில் சில்லிட்ட சிலிர்ப்பினில்.....
தார் பூசிய வானமதின்
தவிலொலித் தாளமும்
வாள் வீசும் மேகமதின்
மின்னலொளிக் கோலமும் கைகோர்த்திட ....
தாள் நீங்கிய மேகங்கள்
தான் கொண்ட சூலென
தான் கொண்ட சூலென
பாரமாய் ஈரமாய் பிரசவிக்கும்
தண்ணீர்த் துளிகளின் குளிர்வினில்.....
தண்ணீர்த் துளிகளின் குளிர்வினில்.....
சோர்வுகள் நீக்கிடும்......
உணர்வுகள் என்றும் தொடர்கதை.......
No comments:
Post a Comment